உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில்
திருத்துறைப்பூண்டி, மே 22- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும், வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர், திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு, திருத்துறைப்பூண்டி ஒன்றியம், வரம்பியம் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.181.60 லட்சம் மதிப்பீட்டில் நுணாக்காடு, விஸ்வகொத்தமங்கலம், மடப்புரம், தீபம்பாள்புரம் வரை கட்டப்பட்டுவரும் பாலத்தினையும், இராயநல்லூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், பனையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.38 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும், பூசாலங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.38 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும், பூசாலங்குடி ஊராட்சியில் 15 ஆவது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.43.53 லட்சம் மதிப்பீட்டில் ஆலிவலம் பகுதியில் புதிய சுகாதார துணை மைய கட்டடம் கட்டப்பட்டுவருவதையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கீரக்களூர் ஊராட்சியிலுள்ள ஆசிரமத்தில் குளியலறை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், வரம்பியம் ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளையும், பாமணி ஊராட்சியில் ரூ.8.44 லட்சம் மதிப்பீட்டில் பாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமையற்கூடம் கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு மக்களிடம் நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் மு.அருணா, புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.17.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் கணினி ஆய்வகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியினையும், பெரியகோட்டை ஊராட்சியில், 15 ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.41.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியினையும், புதுப்பட்டியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்பட்டுவரும் வட்ட செயல்முறை கிடங்கின் பணிகளையும், வடுகப்பட்டி ஊராட்சி, ஆதிதிராவிடர் தெருவில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், மங்களூர் ஊராட்சியில் மீன்வளத்துறையின் சார்பில் கடல்பாசி பூங்கா அமையவுள்ள இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கந்தர்வக்கோட்டையில் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறைகள் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, தனித்துணை ஆட்சியர் உட்பட பலர் பங்கேற்றனர்.